spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்

-

- Advertisement -

தையல் மெஷினால் மனைவியை அடித்துக் கொன்ற கொடூர கணவன்

உவரி அருகே கூடுதாழையில் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்த மீனவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதலையை சேர்ந்தவர் மீனவர் அகிலன். இவரது மனைவி ரேஷ்மி இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி ரேஷ்மி கோபித்துக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

we-r-hiring

இதை எடுத்து ரேஷ்மியை அவரது தாயார் சமாதானம் செய்து குழந்தைகளுடன் கூடுதாழையில் உள்ள கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் ரேஸ்மியின் தாயார் மணப்பாட்டுக்கு திரும்பிச் சென்று விட்டார். தொடர்ந்து மாலையில் கணவர் அகிலனுக்கும் மனைவி ரேஷ்மிக்கு விடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அகிலன் மனைவி என்றும் பாராமல் தையல் மெஷினால் மனைவியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ரேஷ்மி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். பின்னர் அகிலன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உவரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த ரேஷ்மியின் உடலை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான அகிலனை உவரி காவல்துறையினர் வலை வீசி தேடி வருவதுடன் . கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ