Homeசெய்திகள்க்ரைம்எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

-

- Advertisement -

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில் வசிக்கும் நர்ரா ஹனுமந்த ராவ், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் தனது மனைவி சசிகலா (40) மற்றும் மகன் அனிஷ் சாய் (7) ஆகியோருடன் குடியேறினார். மார்ச் 23, 2017 அன்று, ஹனுமந்த ராவ் அலுவலகத்திலிருந்து மேப்பிள் ஷேடில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்குத் சென்றபோது  அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டனர்.  உடனடியாக அவர் அமெரிக்க போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

we-r-hiring

வழக்குப் பதிவு செய்த போலீசார் முதலில் அவர்களின் மரணங்களுக்கு நர்ரா ஹனுமந்த ராவ் தான் காரணம் என்று சந்தேகித்தனர். ஹனுமந்த ராவ் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருந்ததாகவும், இதனால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் ஒரு பகுதியாக, ஹனுமந்த ராவின் டி.என்.ஏவுடன் சம்பவ இடத்தில் கிடைத்த டி.என்.ஏ பொருந்தவில்லை. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டறிய நியூ ஜெர்சி போலீசார் தங்கள் விசாரணையை மீண்டும் தொடங்கினர். விசாரணையின் போது, ​​ஹனுமந்த ராவ் தனது சக ஊழியர் ஹமீதுடன் சண்டையிட்டதாகத் தெரியவந்தது. சந்தேகத்தைத் தீர்க்க ஹமித் டி.என்.ஏவையும் சோதிக்க விரும்பினர். ஆனால் விசாரணையின் போது, ​​சசிகலா கொலை செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு ஹமீது இந்தியா சென்றிருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும், அவர்கள் இந்தியாவில் இருந்த ஹமீதுவைத் தொடர்பு கொண்டு, அவரது டி.என்.ஏவை பல முறை கொடுக்கச் சொன்னார்கள். ஹமீது இதற்கு உடன்படவில்லை. இதனால் வழக்கை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் அமெரிக்க போலீசார் சில நாட்கள் குழப்பமடைந்தனர்.

அதன் பிறகு, ஹமீது பயன்படுத்திய கம்பியூட்டரில் அவரது டி.என்.ஏவை எடுக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். இந்த சூழலில், அமெரிக்க நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தில் அவர் முன்பு பயன்படுத்திய லேப்டாப்பை அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. லேப்டாப் பெற்ற அமெரிக்க போலீசார்  ​அதிலிருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ, கொலை நடந்த இடத்தில் கிடைத்த டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் அது சரியாகப் பொருந்தியது. இதன் மூலம், ஹமீத் தான் உண்மையான கொலையாளி என்று போலீசார் முடிவு செய்தனர். இது குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது.

ஹமீத் தற்போது இந்தியாவில் இருப்பதால், அவரை அமெரிக்காவிற்கு ஒப்படைக்குமாறு அமெரிக்க காவல்த்துறை அதிகாரிகள் இந்திய வெளியுறவுத்துறையிடம் கேட்டுள்ளனர். ஹமீத் இருக்கும் இடத்தை அறிந்தவர்கள் தங்களுக்குத் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

மாநிலத்தில் இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் முதன்மையானது – உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!

MUST READ