Homeசெய்திகள்க்ரைம்அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி

அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி

-

அயப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் இருசக்கர வாகனங்களில் மோதியதில் ஒருவர் பலி

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் திருவேற்காட்டில் இருந்து அயப்பாக்கம் செல்லும் சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மூன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. அப்போது எதிர் திசையில் வந்த அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த பெயிண்டரான விஸ்வநாதன் (50) மீது கார் மோதி அவர் முன் சென்ற இருசக்கர வாகனங்களில் மோதி வாகனம் அவர் மீது விழுந்துள்ளது. இதனால் பலத்தகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் அதன் உரிமையாளர் கணேஷ் மற்றும் உடன் வந்த கீர்த்தி ஆகியோரை சிறை பிடித்தனர். அப்போது காரின் உரிமையாளர் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கீர்த்தியையும் மற்றும் விபத்து ஏற்படுத்திய காரை சிறைபிடித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கார் மற்றும் ஓட்டுநர் கீர்த்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் உயிரிழந்த விஸ்வநாதன் உடலை ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய போது காரை அதன் உரிமையாளர் கணேஷ் என்பவர் ஒட்டி வந்ததாகவும், கீர்த்தி என்பவர் அருகே அமர்ந்திருந்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் கீர்த்தி கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக என வழக்குப்பதிந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் உரிமையாளர் கணேஷ் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்ததாகவும், வரும் வழியில் காவல் துறையை சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தையும் இடித்து விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

விபத்து நடைபெற்ற அயப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும், இதனால் விபத்து அடிக்கடி நிகழ்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

MUST READ