Homeசெய்திகள்க்ரைம்மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை

-

- Advertisement -

மனைவி கண்முன்னே கணவர் வெட்டிக்கொலை

மணப்பாறை அருகே மனைவி, மகன் கண் எதிரே ஐஸ் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி (65). ஐஸ் வியாபாரியான இவர், தற்போது குடும்பத்தினருடன் பொத்தமேட்டுப்பட்டியில் வசித்து வருகிறார். இன்று காலை தனது மகன் மற்றும் மனைவியுடன் கரும்புளிபட்டியில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுவிட்டு பொத்தமேட்டுப்பட்டிக்கு மனைவி சீரங்கம்மாளுடன் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் குப்புசாமியின் மகன் மாரிமுத்து (25) பின்னால் சென்று கொண்டிருந்தார்.

இரண்டு மொபட்டுகளும் குளித்தலை – மணப்பாறை சாலையில் கலிங்கபட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு மொபட்டில் வந்த தந்தை – மகனை வழிமறித்தது. பின்னர் குப்புசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நிலையில் அதை தடுக்க முயன்ற மாரிமுத்துவையும் சரமாரியாக வெட்டினர். இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

படுகாயமடைந்த நிலையில் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குப்புசாமியின் மனைவி சீரங்கம்மாள் சம்பவம் நடந்த போது பதறித் துடித்தார். அவர் வாய் பேச முடியாத, காதுகேட்காத மாற்றுத் திறனாளி என்பதால் என்னவென்று தெரியாமல் பதறித்து துடித்தார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாரிமுத்துவின் உறவுக்கார பெண்ணை கொலை செய்த கும்பலைச் சேர்ந்த ஒருவர், காதலித்ததில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ