பட்டுக்கோட்டையில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
பட்டுக்கோட்டையில் பாஜக (மதுரை) மகளிர் அணி நிர்வாகி சரண்யா திருணமாகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரை, நேற்று நள்ளிரவு ஜெராக்ஸ் கடையில் இருந்து தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் தீடீரென மர்ம நபர்கள் மறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். தலை துண்டிக்க பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளாா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கபிலன், குகன், பார்த்திபன் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இதில் கபிலன் சரண்யாவின் 2-வது கணவரின் முதல் மனைவியின் மகன் ஆவார். சரண்யாவுக்கு முதல் திருமணமாகி கணவர் உயிரிழந்ததால் பாலன் என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளாா் என்பது குறிப்பிடதக்கது.