Homeசெய்திகள்க்ரைம்பெண்களே உஷார்…இன்ஸ்டா மோகத்தால் ஆபத்து!

பெண்களே உஷார்…இன்ஸ்டா மோகத்தால் ஆபத்து!

-

- Advertisement -

சென்னையில் உள்ள அண்ணாநகரில் இன்ஸ்டா மோகத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் அத்துமீறிய வாலிபா் போலீசாரால் கைது செய்யப்பட்டாா்.பெண்களே உஷாா்…இன்ஸ்டா மோகத்தால் ஆபத்து! சென்னையில் உள்ள அண்ணாநகரில் நேற்று முன் தினம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் புகாா் அளித்துள்ளாா். அந்த புகாரில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்  தினமும் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசிவந்துள்ளனா். இந்நிலையில், திடீரென்று தன் மீது சந்தேகம் ஏற்பட்டு இரவு நேரங்களில் யாரிடமும் பேசக்கூடாது என்றும் என்னிடம் மட்டும்தான் பேசவேண்டும் என்று கூறுகிறாா். ஆபாச வீடியோக்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து இதே போலவே எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையெனில் உனது மகளின் படத்தை மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பிவிடுவேன் என்று மிரட்டுகிறாா். இதனால் கோபியின் செல்போன் நம்பரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டு, புதிய செல்போன் நம்பரை வாங்கினேன்.

இதன் பிறகு கோபி, எனது அக்காவின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அவரை மிரட்டி எனது புதிய செல்போன் நம்பரை பெற்றுக் கொண்டு மீண்டும் என்னை தொடர்புக் கொண்டு நீ என்னிடம் பழகி வந்ததை உன்னுடைய கணவரிடம் தெரிவிப்பேன் என்று மிரட்டுகிறான். மீண்டும் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறான். இதனால் என்ன செய்வது என்று  எனக்  தெரியவில்லை. எனவே கோபியை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை அமைத்து கோபியின் செல்போன் நம்பரை டவர் மூலம் கண்காணித்த போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் அங்கு சென்று கோபியை கைது செய்தனர். இவர் சிறுவயதிலேயே வேலைக்கு சென்று விட்டார். தற்போது தேங்காய் குடோனில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவ்வாறு தெரிய வந்துள்ளது.

மேலும் கோபி, வெவ்வேறு பெயரில் ஐந்து முகநூல் பக்கங்களும் 9 இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்து நிறைய பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். கோபியிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ‘’இன்ஸ்டாகிராம் ஆர்வம் உள்ள பெண்களுக்கு பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மீண்டும் பெண்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு மாட்டிக்கொள்கின்றனர். இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலைமை உருவாகி உள்ளது. இனிமேலாவது இன்ஸ்டாகிராம் மற்றும் இணையதளத்தில் பெண்கள் உஷாராக இருக்கவேண்டும்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வரின் வருகை… 2,000 போலீசார் குவிப்பு…

MUST READ