Homeசெய்திகள்மாவட்டம்அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை...

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது – போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

-

- Advertisement -

மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமியின் கணவர் மீது ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரையுடன் போலி அடையாள அட்டை தயார் செய்து பண வசூலில் ஈடுபட்டதாகவும் , அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகாா் அடிப்படையில் மாவட்ட திட்டக்குழுவை சேர்ந்த மகளிர் திட்ட இணை இயக்குநர் பிச்சாண்டி, திட்ட அலுவலர்கள் உமாசங்கர், பானுமதி உள்ளிட்ட 5 அதிகாரிகள் மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

*3 கோடியே 75 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட திட்டக்குழுவினர் மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்வதால் பரபரப்பு. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் மேவளூர்குப்பம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவியாக அபிராமி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் ராஜேஷ் அதிமுக கட்சியில் உள்ளார்.

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா் அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

தன்னுடைய மனைவி தலைவியாக இருக்கும்போது கணவர் ராஜேஷ் தான் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருவதாகவும் , எந்த ஒரு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி மீது வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட திட்டக்குழுவை சேர்ந்த மகளிர் திட்ட இணை இயக்குநர் பிச்சாண்டி, திட்ட அலுவலர்கள் உமாசங்கர், பானுமதி உள்ளிட்ட 5 அதிகாரிகள் மேவளூர்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஊராட்சி பணிகள் தொடர்பாக  ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராஜேஷ்க்கு சொந்தமான SR குரூப்ஸ் நிறுவனத்திற்கு எந்த ஒரு டெண்டரும் விடாமல் நேரடியாக செல்வதாக கூறப்படுகிறது.அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் ஆலோசகர் என அரசாங்க முத்திரை பயன்படுத்தி போலியாக தயார் செய்யப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி அருகில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் , மேவளூர்குப்பம் ஊராட்சியில் தொழிற்சாலை அனுமதி வழங்க 50 லட்சம் வரை லஞ்சம் கேட்பதாகவும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு தேசியக் கொடியையும் ஏற்றி வருவதாகவும்.

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராஜேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளின் காரணமாக ஆதாரத்துடன் மேவளூர்குப்பம் ஊராட்சியை சேர்ந்த நபர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில். தற்போது மாவட்ட திட்ட குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி, ஊராட்சி செயலாளராக இருந்து வந்த யசோதை என்பவர் மேவளூர்குப்பம் ஊராட்சியில் பணியாற்ற விருப்பமில்லை என திருப்பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதிய கடிதமும் தற்போது  கிடைத்துள்ளது.

அதில் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும் அவருக்கு பதிலாக அவரது கணவர் ராஜேஷ்  ஊராட்சி மன்ற தலைவர்  நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஊராட்சி செயலரான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தும், வேறு ஊராட்சிக்கு மாற்றம் செய்து கொண்டு போகும் படியும் மிரட்டல் செய்து வருகின்றனர், ஊராட்சி செயலர் கணக்குகளை பராமரிக்க கேட்கும்போது தாமே மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அதிமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது - போலி அடையாள அட்டை கொண்டு பண மோசடி புகாா்

ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொறுப்பேற்ற நாள் முதல் இதுநாள் வரையில் கணக்குகள் கொடுக்கப்படாததால் ஒன்றிய நிர்வாகத்தில் இருந்தும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்தும் கணக்குகள் கேட்கும் போது காண்பிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.

மேலும் தொடர்ந்து பணியினை செய்யவிடாமல் பல தொல்லைகள் கொடுத்தும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன் எனவே எனது குடும்ப சூழ்நிலையினை கருதில் கொண்டு வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்து தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் சென்னை வருகை!

MUST READ