அரசு மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை நான் மனதார பாராட்டுகிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பேசியுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் விழாவில் அவர் பேசுகையில், “மாணவர்கள் கல்வியில் உயர்வதற்கு இன்றைக்கு அரசு உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் படிக்கும் போது நோட் புத்தகம் சைக்கிள் எல்லாம் நாங்கள்தான் வாங்க வேண்டும். அந்த காலத்தில் பள்ளிக்கு நாங்கள் சைக்கிளில் போனால் சட்டை காலரை தூக்கி விட்டுப் போவோம், ஏனெனில் ஒரு சிலரிடம் தான் சைக்கிள் இருக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள மாணவர்களுக்கு அரசு இலவச சைக்கிள், பஸ் பாஸ், புத்தகம் ஆகியவற்றை அரசே வழங்குகிறது. நோட், பேனா, பென்சில், பேக், வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் என அனைத்து கல்வி உபகரங்களையும் அரசை வழங்குகிறது
காலில் போடும் காலணி முதல் கம்ப்யூட்டர் வரை இன்றைக்கு அரசே கொடுத்து படிக்க வைக்கிறது என்றால் இந்த காலத்து மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக உருவாக எந்த தடையும் இல்லை. இன்றைக்குள்ள ஆசிரியர்களுக்கு வேலை சுமை அதிகம் என்றாலும் உங்களை செதுக்கும் சிற்பிகளாக செயல்படுகின்றனர். இன்றைக்கு நல்ல வேளை மடிக்கணினியை திரும்ப கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மாணவர்களுக்கு மடிக்கணி வழங்குவது சிறந்த திட்டம். உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான்.

மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டம் இன்றைக்கு அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் அது துவக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மேல் அந்த சப்ஜெக்ட் வேண்டாம். நல்லவேளை 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நல்ல மனசு கடைசி காலத்தில் வந்துள்ளது. அதை மனதார பாராட்டி, அது அருமையான திட்டங்கள், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுக்கும் திட்டம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் கொடுக்கின்றன“ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டினாா்.
மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ…


