நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்களும், சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளது. 385 சதுர கிலோமீட்டரால் பறந்து விரைந்து காணப்படும் இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் பறவைகள் வலசை வர தொடங்கும். மார்ச் மாதம் வரை ஆறு மாதங்கள் இங்கு தங்கிருந்து பின்னர் பறவைகள் இடைப்பெயர்ந்து செல்லும். அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி கோடியக்கரை பகுதிகளில் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட 15 நாடுகளில் இருந்து பறவைகள் வலசை வர தொடங்கியுள்ளனர்.
இச்சரணாலயத்திற்கு செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கிடா, வெண்கொக்கு, கொசு உள்ளான் உள்ளிட்ட 295 வகையான பறவைகள் வந்து குவிந்துள்ளன. இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்ப் ஹவுஸ் உள்ளிட்ட பறவைகளும் இங்கு வலசை வந்துள்ளன. ரம்மியமான சூழலில் பறவைகள் சிறகடித்து பறப்பதைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர். கோடியக்கரை தட்ப சூழல் பறவைகளுக்கு ஏற்ற வகையில் நிலவுவதால், இந்த ஆண்டு லட்சக்கணக்கில் பறவைகள் வர வாய்ப்புள்ளது என்று மும்பை பறவை ஆராய்ச்சியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.



