- Advertisement -
திருப்பதியில் லட்டு விநியோகம் செய்யும் இடத்தில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47ம் நம்பர் கவுண்டரில் யு பி எஸ் ல் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் லட்டு விநியோக கவுண்டரில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த தேவஸ்தான மின்சார துறை அதிகாரிகள் மின்விநியோகத்தை நிறுத்தி யு பி எஸ் இணைப்பை துண்டித்து தீ விபத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.