Homeசெய்திகள்க்ரைம்திருப்பதி உண்டியலில் திருட்டு - ஊழியர் கைது

திருப்பதி உண்டியலில் திருட்டு – ஊழியர் கைது

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் 100 கிராம் தங்க பிஸ்கட் மறைத்து எடுத்துச் செல்லும்போது போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பதி உண்டியலில் திருட்டு - ஊழியர் கைதுதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். பக்தர்கள் தினந்தோறும் மூன்று முதல் 5 கோடிக்கு  மேல் தங்கம், வெள்ளியாக காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல் நிரம்பியதும் காணிக்கைகள் அவ்வப்போது பலத்த பாதுக்காப்பிற்கு மத்தியில்  கோயிலுக்கு வெளியே உள்ள பரக்காமணி ( உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்திற்கு ) கொண்டு சென்று எண்ணப்படுவது வழக்கம்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த  ஒப்பந்த ஊழியர் பென்சிலய்யா என்பவர் உண்டியல் கொண்டு செல்லும் ஒரு டிராலியில் 100 கிராம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டை  மறைத்து வைத்து கொண்டு சென்றுள்ளார். இதனை தேவஸ்தான  விஜிலன்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அவரை திருமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்  வழக்குப் பதிவு செய்து இந்த திருட்டில் பென்சிலய்யா தனியாக ஈடுப்பட்டாரா அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!

MUST READ