- Advertisement -
பகவானே… அயோத்தியிலும் இதைத்தானே கொடுத்தோம்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். “அயோத்தி கோயில் திறப்பு விழாவில் 300 கிலோ திருப்பதி லட்டை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்திருக்கிறோம்.
வைணவர்கள் தங்கள் உணவில் பூண்டு, வெங்காயம் கூட சேர்க்க மாட்டார்கள் என்ற பட்சத்தில் விலங்குகளின் கொழுப்பை அதில் கலந்து விட்டார்களே..” என வேதனை தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22ம் தேதி அயோத்திக்கு திருப்பதியில் இருந்து 1 லட்சம் லட்டுகள் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வறிக்கையை FSSAI பரிசீலனை செய்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆய்வக அறிக்கையில் பன்றி கொழுப்பு, மாட்டிறைச்சி கொழுந்து, பாமாயில் இருப்பதை உறுதிசெய்துள்ளனர்.