Homeசெய்திகள்இந்தியாமத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்

மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்

-

- Advertisement -

மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் சுமார்10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு நீண்ட நேரம் படமெடுத்து ஆடியதை கண்ட அங்கிருந்த நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.மத்தியபிரதேசம்: சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது – அதிர்ச்சியில் நோயாளிகள்சாகர்: மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அங்கிருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சமடைந்தனர்.

உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதியில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு அப்பால் அந்த பாம்பு நீண்ட நேரம் படமெடுத்து ஆடிய காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

we-r-hiring

இந்த திகில் சம்பவம் குறித்து பேசிய சம்பவ இடத்தில் இருந்தவர்கள் , ஒரு பிரம்மாண்டமான நாகப்பாம்பு, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளுக்கு வெளிப்பக்கமாக சுற்றி கொண்டு, தன் நாக்கை வெளியே நீட்டி ஆட்டியபடியே இருந்தது. அந்தப் பாம்பு ஒரு கணம் அறைக்குள் எட்டிப் பார்ப்பதும், அடுத்த கணமே வெளியே பார்ப்பதுமாக சுமார் அரை மணி நேரம் அவ்விடத்தில் இருந்து கொண்டு எங்களை பெரும் பீதிக்குள்ளாக்கியது என கூறி உள்ளனர்.

இது குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள உள்ளூர்வாசிகள் சாகர் மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) ஜன்னல்களில் ஆபத்தான மற்றும் விஷமுள்ள பாம்புகள் அடிக்கடி தென்படுகின்றன என்று கவலை தெரிவித்தனர். இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) வார்டு சில ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. அதற்கு நேர் பின்னால், பரந்து விரிந்த ஒரு மருத்துவமனைத் தோட்டம் அமைந்துள்ளது; போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், இத்தோட்டம் புதர்கள் மண்டிப்போய் காடு போல மாறிவிட்டது. பாம்புகளும் பிற விஷப்பூச்சிகளும் இங்குத் தஞ்சம் புகுந்துள்ளன. அவ்வப்போது, ​​ஜன்னல் கம்பிகளைச் சுற்றிக்கொண்டிருக்கும் பெரிய பாம்புகள் தென்படுகின்றன; இக்காட்சி நோயாளிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறினர். இந்நிலையில் ஐசியு ஜன்னல் கம்பிகளில் 10 அடி நீளமுள்ள ராஜநாகம் சுற்றி கொண்டு படமெடுத்த ஆடிய சம்பவத்தில் காட்சிகள் அடங்கிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருவதும், முன்னதாக தெருநாய்கள் மற்றும் எலிகளின் நடமாட்டம் காரணமாகவும் இந்த மாவட்ட மருத்துவமனை செய்திகளில் இடம்பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மோகத்தால் தொடரும் சோகம்… 3 சகோதரிகள் தற்கொலை!!

MUST READ