spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

-

- Advertisement -

 

முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக வருகை ரத்து!
Photo: CM Nitish Kumar

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

we-r-hiring

துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறுவதாக தகவல் வெளியான நிலையில், பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் தனது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரைச் சந்தித்து, தனது முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆளுநரிடம் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதிஷ்குமாரே அதனை உடைத்து வெளியேறினார். அதேபோல், பா.ஜ.க. ஆதரவுடன் இன்று (ஜன.28) மாலை 05.00 மணிக்கு பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார். அத்துடன், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!

பா.ஜ.க., ஜித்தன்ராம் மஞ்சி உள்ளிட்டக் கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ