spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

-

- Advertisement -

 

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!
Photo: ANI

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) காலை 11.30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

we-r-hiring

சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு சென்ற ரயிலில் தீ விபத்து!

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசிக்கவுள்ளன.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா (உத்தவ் தாக்கரே), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகள் பங்கேற்கின்றனர். அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டி.ராஜா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

முக்கிய தலைவர்கள் பாட்னாவில் குவிந்துள்ளதால், பாட்னா முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காவிடில் கூட்டத்தைப் புறக்கணிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ