குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; மூவர்ண கோடி அரை கம்பத்தில் பறக்கும் நிலையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் கடந்த வாரம் விபத்துக்குள்ள நிலையில் 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதனிடையே இன்று குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் முழுவதும் மூவர்ணக் கொடி அறை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதோடு முழு அரசு மரியாதையுடன் ரூபானி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!