கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40- க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை- தூத்துக்குடி இடையே தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை- கோவை இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 16 விமானங்கள் இயக்கப்படுகிறது.
சென்னை- மதுரை இடையே 10 விமானங்களுக்கு பதில் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை- பெங்களூரூ இடையே 16 விமானங்களுக்கு பதில் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை- ஹைதராபாத் இடையே 20 விமானங்களுக்கு பதில் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன