Homeசெய்திகள்இந்தியாமீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட உத்தராகண்ட் முதலமைச்சர்!

மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட உத்தராகண்ட் முதலமைச்சர்!

-

- Advertisement -

 

மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட உத்தராகண்ட் முதலமைச்சர்!
Photo: CM Of Uttarakhand

உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின் போது, சுரங்கப் பாதை சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து வரும் 40 பேர் உயிருடன் உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

உத்தராகண்ட் மாநிலம், சில்க்யாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று (நவ.12) சுரங்கத்தின் சுவர்கள் சரிந்து விழுந்தனர். உள்ளே சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளதாகக் கருதப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் பார்வையிட்டார். அதி நவீன துளையிடும் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டால், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

உலககோப்பை கிரிக்கெட் : அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை..!

ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

MUST READ