
206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை (ஜன.19) ஆந்திராவில் திறக்கப்படவுள்ளது.
மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!
இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் சிலை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்மிரிதி வனம் என்ற பெயரிடப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, நாளை (ஜன.19) திறந்து வைக்கவுள்ளார்.
சமூக நீதியின் மிகப்பெரிய சிற்பம் இந்த சிலை எனக் கூறிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திறப்பு விழாவில், தாமாக முன்வந்து கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகை- தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!
125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை 81 அடி உயர பீடத்தில் நிறுவப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18.81 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலை திட்டத்திற்கு சுமார் 404 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.