Homeசெய்திகள்அரசியல்"இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் " - அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்

“இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் ” – அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்

-

- Advertisement -

“இனிமேல் இப்படி பேசுனா பதிலடி தான் ” – அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்

அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், திண்டுகல் சீனிவாசன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

EPS

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக தொண்டர்கள் கொதித்து எழும் நிலையில் உள்ளனர். அண்ணாமலை அவர் கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும். இதை அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்தார்? எங்கு படித்தார்?.. ஏதோ இவர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல, நடக்காத விஷயத்தை சொல்லக்கூடாது. அதிமுக இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறது.

முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டு உள்ளது. அண்ணா பற்றி அண்ணாமலை தவறாக பேசியதற்கு அதிமுக கண்டம் தெரிவிக்கிறோம், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்.மீண்டும் பேசினால் அதிமுக தக்க பதிலடி கொடுக்கும். 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக திமுக சொல்வது ஜமுகாலத்தில் வடிக்கட்டிய பொய். மின்சார கட்டணம், சொத்து வரி, பால் கட்டணம் எல்லாம் ஏற்றி விட்டு, தமிழக மக்களுக்கு யானை பசிக்கு சோள பொறியாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்ளது. கல்விக் கடன் ரத்து என்று சொன்னார்கள் செய்யவில்லை, நகை கடன் முழு தள்ளுபடி என்று சொல்லி 10 % தான் செய்தார்கள். தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் முழு பூசணிக்காயை அல்ல, ஒரு பாராங்கல்லையே சோற்றில் மறைக்கக் கூடிய வல்லமை படைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்” என்றார்.

 

 

MUST READ