spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பா.ஜ.க. மோடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா ? - திருமாவளவன்

பா.ஜ.க. மோடி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா ? – திருமாவளவன்

-

- Advertisement -

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு என் மீதான நம்பகத் தன்மையை நொறுக்கும் வகையில் அமைந்தது - திருமாவளவன்”பா.ஜ.க, அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்பதை அண்ணாமலை தெளிவு படுத்த வேண்டும்” என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இன்று  காலை ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்த தொல்.திருமாவளவன், மதியம் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வி.சி.க., எம்.பி.,க்களின் புயல் நிவாரண நிதியை வழங்கி உள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,” மத்திய அரசு வழக்கம் போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. வி.சி.க. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.

we-r-hiring

தி.மு.க., தரப்பில் இருந்து எந்த நெருக்கடியும், அழுத்தமும் எனக்கு இல்லை. ஆதவ் அர்ஜூனாவை இடை நீக்கம் செய்தது குறித்து அவர்கள் யாரும் பேசவில்லை. விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில், நான் பங்கேற்க இயலாது என எடுத்த முடிவு, சுதந்திரமான முடிவு.

வி.சி.க.,வுக்கும், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் எந்த மோதலும் இல்லை. விஜயயோடு எங்களுக்கு எந்த சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு வி.சி.க., மற்றும் என் மீதான நம்பகத் தன்மையை நொறுக்கும் வகையில் அமைந்தது. எனவே இடை நீக்கம் முடிவை எடுத்தோம். ஆதவ் அர்ஜூனாவுக்கு பலமுறை வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கினோம்.

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என ஆதவ் அர்ஜூனாவிடம் அறிவுறுத்தி இருந்தோம். 6 மாத இடைநீக்கத்தில் ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள் பொறுத்தே அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பா.ஜ.க. அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று முதலில் அண்ணாமலை சொல்ல வேண்டும்” என  திருமாவளவன் கூறினார்.

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதம்… கட்டுப்படுத்த இந்தியாவுக்கு வரும் புதிய மருந்து..!

MUST READ