- Advertisement -
தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்கிறார்கள், அதனால் அவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
தேமுதிகவுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக எல்.முருகன் அறிவித்த நிலையில், அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் உறுதி செய்துள்ளாா். மத்திய அரசில் தேமுதிக பதவி கேட்பதால், பாஜகவிடமே பேசிக்கொள்ளும்படி அதிமுக தரப்பில் சொல்லிவிட்டதாக அவர் கூறியுள்ளாா். மேலும், தேமுதிகவின் எதிர்பார்ப்புகள், பிரச்சனைகள் குறித்து மாநில அளவில் பேச முடியாததாலும், அக்கட்சியுடன் பாஜக தேசிய தலைமை பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தாா்.

மேலும், தேமுதிக -பாஜக கூட்டணி பேச்சவார்த்தை நல்லபடியாக முடியும் என எதிர்ப்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினாா்.


