- Advertisement -
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறார் என்று டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இயற்கை பேரிடர் நிதியை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்வர் ஏற்கனவே பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்திள்ளார். ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.