spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

-

- Advertisement -

ராகுல்காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு

ராகுல் காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மே 4ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அதன் பின்னர் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

கடந்த 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகா மாநிலம் கோளரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் “மோடி” என்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் மோசடி செய்கின்றவர்களாக இருக்கிறார்கள் என்று பேசினார். அதற்கு ராகுல்காந்தி “மோடி” என்ற சமுதாயத்தை இழிவு செய்து விட்டதாக அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய குஜராத் மாநில சூரத் செசன்ஸ் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி ராகுல்காந்தி குற்றவாளி என அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதனை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார்.

கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

அப்போது அவர், கேரளா மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளதால் மக்களவைத் தொகுதிக்கான பிரதிநிதியின் குரல் மறுக்கப்பட்டுள்ளது. இது ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளார், நீதிமன்றத்தில் வாதாடுகிறார் என்பதைப் பற்றி எல்லாம் தேர்தல் ஆணையம் கவலைப்படுவதில்லை! தேர்தல் ஆணையம் விதிமுறைகளின் படி மூன்று மாதங்களுக்குள் இடைத்தேர்தலை அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன்படி அறிவித்தால் என்ன செய்வது?

நீதிமன்றத்தால் தேர்தல் நடத்துவதை நிறுத்த முடியுமா? என கேள்வி எழுப்பியதோடு மக்களவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். அதனால் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

ஆனால் இந்த வழக்கில் எவ்வித இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது என்றும் கோடை விடுமுறைக்கு பின்னரே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ