spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு- வெள்ளை அறிக்கை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்

இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு- வெள்ளை அறிக்கை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்

-

- Advertisement -

இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு- வெள்ளை அறிக்கை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்

இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani

சென்னை எழும்பூரில் பாமக சார்பில் இஸ்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி குடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “நான் வாட்ச் கட்டுவதே கிடையாது. விவசாயிகள் பிரச்சனை, ஆன்லைன் சூதாட்டம் வேலைவாய்ப்பின்மை இப்படி தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இந்த வாட்ச் பிரச்சனை தேவையற்றது. என்எல்சி விவகாரத்தில் கடலூர் மாவட்டத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி நடைபெறுகிறது.

we-r-hiring

நிலக்கரி விவகாரத்தில் தஞ்சாவூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? கடந்த ஓராண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதுவால் வருமானம் வந்திருக்கிறது என்று சொன்னால் அதன் மூலமாக எத்தனை கோடி குடும்பங்கள் அழிந்து இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு 3.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனால் எவ்வளவு பேர் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு வெளிப்படையாக வெள்ளையருக்கை மூலம் விளக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

MUST READ