இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒன்பது போட்டிகளுக்கான தேதிகளை மாற்றி அறிவித்துள்ளது ஐ.சி.சி.
‘ஃபிளையிங் கிஸ்’- சர்ச்சையில் ராகுல் காந்தி!
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரை நடத்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஒன்பது போட்டிகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 15- ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி, அக்டோபர் 14- ஆம் தேதியே நடைபெறும்.
இந்தியா- நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் நவம்பர் 11- ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 12- ஆம் தேதி நடைபெறும். இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் அக்டோபர் 14- ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 15- ஆம் தேதி நடைபெறும்.

அதேபோல், நவம்பர் 11- ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியும், இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெறவுள்ளது. அக்டோபர் 10- ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டியும் நடைபெறவுள்ளது.
“17 மணி நேரம் உழைக்கிறார் பிரதமர் மோடி”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அக்டோபர் 12- ஆம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியும், அக்டோபர் 13- ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியும் நடைபெறவுள்ளது. பண்டிகை நாட்கள், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு ஐ.சி.சி. தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.