Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 பேர் தப்பியோட்டம்

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 பேர் தப்பியோட்டம்

-

- Advertisement -

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 பேர் தப்பியோட்டம்

அண்மையில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கோகுல் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 பேர் தப்பியோடியுள்ளனர்.

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர்கள் மோதல் | Chengalpattu reform  school boys clash

செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல குற்ற சம்வங்களில் ஈடுபட்ட சிறுவர்களை தங்க வைத்துள்ளனர். இங்கு 40 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி மாலை திடீரென மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 21-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்த 3-சிறுவர்களையும், சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் தனி அறையில் அடைந்துள்ளனர். அப்போது 3-சிறார்களும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வருகின்றனர்.

MUST READ