பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்- நடிகர் விஜய்
தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை விஜய் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், “உங்களில் என்னை காண்கிறேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது. நான் Below averege student. படிப்பை மட்டும் யாரிடமும் இருந்தும் பிடுங்கிக்கொள்ளவே முடியாது. என்னோட கனவு அனைத்தும் சினிமா, நடிப்பு அதை நோக்கியே பயணம் செல்கிறது. உங்களை தாழ்வுப்படுத்த ஒரு கூட்டம் இருக்கும். அவர்கள் சொல்வதை கேட்காதீர்கள். உங்களுக்குள் ஒரு குரல் கேட்கும். அது என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுங்கள்.

சாதிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பது நீண்ட கால கனவு. படிப்பை மட்டும் உன்னிடம் இருந்து எடுக்க முடியாது. தனிப்பட்ட அடையாளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதீர்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி அறிந்து கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலின் உண்மையை அறிய வேண்டும். இன்றைய மாணவர்களே நாளைய வாக்காளர்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டும். இதனை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.