Homeசெய்திகள்தமிழ்நாடுபாட்டி சொல்லைத் தட்டாத நடிகர் விஷால்!

பாட்டி சொல்லைத் தட்டாத நடிகர் விஷால்!

-

- Advertisement -

 

பாட்டி சொல்லைத் தட்டாத நடிகர் விஷால்!
Video Crop Image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் படப்பிடிப்பிற்காகச் சென்ற நடிகர் விஷால், அங்குள்ள கிராமத்திற்கு தனது சொந்த செலவில், குடிநீர் வசதி செய்துக் கொடுத்துள்ளார்.

“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் படப்பிடிப்பு விளாத்திக்குளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள சென்னம்மாள் என்ற பாட்டி தங்களது கிராமத்திற்கு குடிநீர் வசதிச் செய்துத் தருமாறு விஷாலிடம் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து, தனது சொந்த செலவில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுத்த நடிகர் விஷால், ஆறு குழாய்கள் மற்றும் இரண்டு தண்ணீர் தேக்கத் தொட்டிகளை கட்டிக் கொடுத்து, நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

மருத்துவ மாணவி மரணம் : கடும் தண்டணை பெற்றுத்தர சீமான் கோரிக்கை..

நடிகர் விஷாலின் நடவடிக்கைக்கு அந்த கிராம மக்களும், பாட்டி சென்னம்மாளும் மனதார நன்றித் தெரிவித்துள்ளனர்.

MUST READ