spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்

கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்

-

- Advertisement -

கள்ளச்சாராய வழக்கு- விசாரணை அதிகாரிகள் நியமனம்

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

203 கள்ளச்சாராய வியாபாரிகள் அதிரடி கைது

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராய வேட்டை நடத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சாராயம், கஞ்சா விற்பனை செய்து வரும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

we-r-hiring

இதனிடையே கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மரக்காணம் எக்கியார்குப்பம் கள்ளச்சாராய வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்கை ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை செய்ய உள்ளார்.

MUST READ