Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னை வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்கு ரூபாய் 561.29 கோடி"- மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவு!

“சென்னை வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்கு ரூபாய் 561.29 கோடி”- மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவு!

-

- Advertisement -

 

'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
Photo: Minister Amit Shah

சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூபாய் 561.29 கோடியை விடுவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

“மழைநீர் வடிகால்- வெள்ளை அறிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கடந்த எட்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது பெரிய வெள்ளத்தை சென்னை எதிர்கொள்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு நிதியத்தின் கீழ் சென்னை வெள்ள மேலாண்மைத் திட்டத்திற்காக ரூபாய் 561.29 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ள மேலாண்மை திட்டத்தின் மூலம் வெள்ளத்தை தாங்கக் கூடிய வகையில் சென்னை மாறும். நகர்ப்புற வெள்ள மேலாண்மைக்கான கட்டமைப்பை பரவலாக்கும் வகையில் இத்திட்டம் உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.

மழை பாதிப்பு- தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி ஒதுக்கீடு!

இதனிடையே, சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

MUST READ