Homeசெய்திகள்தமிழ்நாடு"விருப்பப் பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை"- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

“விருப்பப் பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

-

- Advertisement -

 

"பாதுகாவலர் காலிப் பணியிடங்களை நிரப்பவில்லை"- டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு!

விருப்பப் பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (ஜன.28) பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, “விருப்பப் பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது. 20- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென உதயநிதி கேட்டதில் தவறில்லை. உதயநிதி கேட்டது போல் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி முதலமைச்சரிடம் தெரிவிப்பேன். கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையவுள்ளதாக என்ற கேள்விக்கு தெரியவில்லை. நிதிஷ்குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது.

MUST READ