திருப்பூரில் நூல் வியாபாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருமையான பாதாம் அல்வா செய்வது எப்படி?
திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியில் நூல் வியாபாரம் செய்து வருபவர் அங்ராஜ். இவரது நிறுவனத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல், தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி சோதனை நடத்தினர். மேலும், நிறுவனத்தில் இருந்து ஒரு கோடியே 69 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்ட அவர்கள் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்து ஆதாரத்தை சமர்பித்துவிட்டு, பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
இந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அங்ராஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட விஜய் கார்த்திக், நரேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.
உடல் முழுவதும் வெள்ளையாக வேண்டுமா….. இதை செய்து பாருங்க!
அவர்களிடம் இருந்து மூன்று கார், செல்போன், ரூபாய் 1 கோடியே 10 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.