spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக, அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

-

- Advertisement -

திமுக, அதிமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

கோவை எட்டிமடை பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கவுன்சிலர்கள்

கோவை எட்டிமடை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 8 திமுக கவுன்சிலர்களும், 4 அதிமுக கவுன்சிலர்களும் உள்ளனர். இந்த பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த கீதா ஆனந்தகுமாரும், துணைத் தலைவராக நாகராஜனும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கே தகவல் சொல்வது இல்லை என்றும், பேரூராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக தலைவர் கீதா ஆனந்தகுமார் மீது திமுக, அதிமுக கவுன்சிலர் குற்றம் சாட்டினர்.

we-r-hiring

இந்நிலையில் இன்று எட்டிமடை பேரூராட்சியின் சாதாரன கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காரணமின்றி கூட்டம் நடைபெறாது என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பேரூராட்சி கூட்டத்திற்காக வந்த திமுக , அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து திமுக கவுன்சிலர்கள் கூறும் போது தலைவர் கூட்டத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால் துணை தலைவர் தலைமையில் கூட்டம் நடத்தலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இருப்பினும் துணை தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை.

கவுன்சிலர்கள்

மேலும் மக்கள் பிரச்சனை குறித்து விவாதிப்பது இல்லை என தெரிவித்தனர். மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த கட்டிடத்திற்கான வரைபடத்தோ, திட்டம் குறித்து கூட கவுன்சிலர்களிடம் தெரிவிக்கவில்லை என தெரிவித்தனர். மேலும் பேரூராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே திமுக பேரூராட்சி தலைவரை மாற்ற வேண்டும் என திமுக அதிமுக கவுன்சிலர்கள் கூறி வருவதால் எட்டிமடை பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ