- Advertisement -
சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மத்திய மாவட்டம் , சேலம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் சக்கரை ஆ.சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெ. ஜெயக்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


