spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்த புகாரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

we-r-hiring

ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டார். அதற்கான வேட்பு மனுவில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் மற்றும் ஆண்டு வருவாய் ஆகியவற்றைக் குறைத்துக் காட்டியுள்ளதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைவாணி, புகாரில் முகாந்திரம் இருப்பின், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1962- ன் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“கேரளா ஸ்டோரி படம் மதத்திற்கு எதிரானது அல்ல”… நடிகை சித்தி இத்னானி விளக்கம்!

வழக்கறிஞர் மிலானி தொடர்ந்த வழக்கிற்கு தடைக்கோரி எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் ஜூன் 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ