Homeசெய்திகள்தமிழ்நாடுமின்சார ரயில் சேவைகள் ரத்து....கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

மின்சார ரயில் சேவைகள் ரத்து….கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

-

 

தென்னக ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இன்று (மார்ச் 03) கூடுதலாக 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் மாநகர பேருந்துகளை விட 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணிக் காரணமாக, மின்சார ரயில்கள் இன்று இயக்கப்படாததால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரை பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்டுள்ளது. பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரத்திற்கு 60 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து தியாகராயர் நகர் மற்றும் எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 10 பேருந்துகளும், இயக்கப்படுகின்றன.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

அதேபோல், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு 30 பேருந்துகளும், பிராட்வே மற்றும் தியாகராயர் நகரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

MUST READ