spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜல்லிக்கட்டின்போது மின்சாரம் கசிந்து விபத்து-9 பேர் காயம்

ஜல்லிக்கட்டின்போது மின்சாரம் கசிந்து விபத்து-9 பேர் காயம்

-

- Advertisement -

ஜல்லிக்கட்டின்போது மின்சாரம் கசிந்து விபத்து- 9 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது உயர்மின்னழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பார்வையாளர்கள் 9 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது வாடிவாசலிலிருந்து அவிழ்க்கப்பட்ட காளை ஒன்று காளைகள் வெளியேறும் பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து கட்டப்பட்ட இழுவை கம்பியில் அதிவேகமாக மோதியதில் உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி கொட்டியது. இதில் 15 பேர் காயமடைந்தனர்.

we-r-hiring

காயமடைந்த அனைவரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் அங்கு கூடியிருந்த மக்களையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

MUST READ