
“தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா?” என்று முதலமைச்சருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – திருமாவளவன் இரங்கல்!
திருச்சி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்டவற்றை நிறுத்தி தமிழகத்தை சீரழித்தது தி.மு.க. தான். தமிழகத்தை நாங்கள் சீரழித்தோம் என்று சொல்லும் முதலமைச்சர் ஆதாரத்தை வெளியிட வேண்டும். 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டி வந்த திட்டங்களைப் பட்டியலிட நாங்கள் தயார்.
ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருந்த மடிக்கணினித் திட்டத்தையும் தி.மு.க. நிறுத்தியது. தி.மு.க. ஆட்சியில் அரிசி, எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஆதாரங்கள் இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சி இருண்ட காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
ஆதாரத்தை வெளியிட்டால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் தர தயார்” என்று முதலமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.