Homeசெய்திகள்தமிழ்நாடுஅவிநாசிபாளையத்தில் விவசாயிகள் 7வது நாளாக காத்திருப்பு போராட்டம்-அண்ணாமலை ஆதரவு

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் 7வது நாளாக காத்திருப்பு போராட்டம்-அண்ணாமலை ஆதரவு

-

- Advertisement -

இருகூரில் இருந்து முத்தூர் வரை ஐ.டி.பி.எல் பைப்லைன் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் 7 வது நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை  போராட்டத்தில் கலந்து கொண்டார்.அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் 7 வது நாள் காத்திருப்பு போராட்டம்- அண்ணாமலை ஆதரவுபாரத் பெட்ரோலிய நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி முதல் கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாவட்டம் இருகூர் வரையிலும்,திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து கர்நாடகா வரை சாலையோரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் கோவை திருப்பூர் மாவட்டங்களில்  70 கி.மீ வரை விவசாய விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 60 கி.மீ வருகின்றது.

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் வழியாக முத்தூர் வரை எண்ணெய் குழாய் பதிப்பதற்கான திட்டத்திற்கு கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தங்களது விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும், நிலத்தின் மதிப்பு வெகுவாக சரியும் எனவும், எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்களில் பதித்தால் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் எனவும், அவசர கதியில் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் நிறைவேற்றி வருவதால் எப்போது வேண்டுமானாலும் குழாய் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எனவே திட்டத்தை சாலையோரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 200 நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அவினாசிபாளையத்தில் ஒன்றினைந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் IDPL பிரச்சினைக்கு என்ன தீர்வு கொண்டு வரலாம் என பேச விரும்புகிறேன். 74 கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் கொண்டு செல்ல கோவை திருப்பூர் மாவட்டம் வழியாக மத்திய அரசு அனுமதி வழங்கியது. 74 கிலோ மீட்டர் CCPL பைப்லைன் எடுத்து செல்கிறோம். 2002-ல் அனுமதி கொடுத்தோம். நில மதிப்பு தான் தற்போது ஆறுதல் அளிப்பதாக மத்திய அமைச்சரிடம் எடுத்து சொன்னோம். மாற்று வழி ஏற்பாடு செய்ய வலியுறித்தினோம்.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் எடுத்து சொன்னேன். ஏற்கெனவே இரண்டு பைப் லைன் திட்டங்கள் சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ளதால், புதிய திட்டத்தை செயல்படுத்துவது சிரமம். புதிதாக 352 விவசாயிகள் நிலத்தின் வழியாக கொண்டு செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உயர் அதிகாரிகளை அனுப்பி வைக்க கோரிக்கை வைத்துள்ளோம். 1512 கோடி செலவில் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த செலவாகி உள்ளது. கூடுதல் செலவுகளை தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசனை நடந்து வருகிறது.

புதிதாக விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல இழப்பீடு தர வேண்டும். நாங்கள் உங்களோடு உறுதியாக நிற்கிறோம். விவசாயிகளுக்கு அன்பான வேண்டுகோள். அறவழக போராட்டம் தொடரும் நிலையில் அதிகாரிகளிடம் பைப்லைன் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுள்ளோம். நான்கு ஊரை சுற்றி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உயர் அதிகாரியிடம் பேசிய பின்பு வேலையை தொடருமாறு கோரிக்கை வைத்துள்ளோம். 15 நாட்கள் பைப்லைன் திட்டம் அமைப்பதை நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்துள்ளோம் என பேசினார். எனவே பேச்சு வார்த்தை முடியும் வரை விவசாயிகள் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெயில் பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாரத் பெட்ரோலியத்தின் ஐ டி பி எல் பைப்லைன் திட்டமும் முத்தூரிலிருந்து சாலை ஓரமாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஐ டி பி எல் பைப்லைன் திட்டத்தையும், தற்போது செயல்படுத்த உள்ள கோவை கரூர் எண்ணெய் குழாய் திட்டத்தையும் சாலையோரமாகவே அமைக்க வேண்டும் என முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, விவசாய பெருமக்கள் 362 கிலோ மீட்டர் அமைக்க உள்ள IDPL திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். பொட்ரோலிய துறை அமைச்சரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்தோம். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிராம சாலைகள் வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் பொட்ரோலியத்துறை இணை செயலாளர்,கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தும் வரை 15 நாட்கள் பைப் லைன் அமைக்கும் திட்ட வேலைகளை நிறுத்தி வைக்க கேட்டுள்ளோம். விவசாய நிலத்தில் இந்த திட்டத்தை கொண்டு செல்ல மாட்டோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். மத்திய அரசுக்கு மாநில அரசு தான் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். விவசாயிகள் திட்டம் வேண்டாம் என கூறவில்லை. மாநில அரசு முன்வந்து IDPL திட்டத்தை சாலை ஓரமாக அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள நிலத்தின் விலை ஏறி வருகிறது. பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் விவசாயிகளின் பிரச்சினையை புரிய வைத்துள்ளோம். ஒவ்வொரு திட்டத்திலும் மத்திய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீதம் பங்களிக்கிறது. மத்திய அரசு திட்டங்களை முழுமையாக அனுமதிக்காமல் நிதி பங்களிப்பை வைத்து தமிழக முதல்வர் அரசியல் செய்வது ஏன்?

எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார். பாஜக தவெக முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகள் போர்த்திற்கு முழு ஆதரவு பாஜக தருகிறது. தடை உடைத்து சீமான் போராட்டம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.‌ தடை நீக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு. அது சீமான் அண்ணன் ஸ்டைல். சிபில் ஸ்கோர் என்பது விவசாயிகளுக்கு எந்த காலத்திலும் பொருந்தாது. மாத சம்பளம் வாங்குபவர்களுக்கே பொருந்தும்.

அன்புமணி அண்ணன் அவர்கள் அவரது தந்தை மீது மரியாதை வைத்துள்ளார். சின்ன இடர்பாடுகள் தான். ராமதாஸ் மற்றும் அன்புமணி மீது பிரதமர் மரியாதை வைத்துள்ளார். கூட்டணி பிரச்சினை என்பதெல்லாம் கட்டுக்கதை. திமுக பொருத்தவரை மைனாரிட்டியாக இருக்கும் போது கூட காங்கிரஸ் கட்சிக்கு இடம் கொடுக்கவில்லை. கூட்டணி பாடம் எடுக்க திமுகவுக்கு அருகதை இல்லை. உயர்நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி முருகர் மாநாடு நடக்கிறது..திராவிட கட்சிகள் ஏன் பதற்றமடைகிறது.சட்டத்துறை அமைச்சரின் பேச்சு நீதிமன்ற அவமதிப்பாகவே நான் கருதுகிறேன்.

சிறுவனின் கடத்தலில் கூட்டுசதி ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது

MUST READ