Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி

திமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி

-

- Advertisement -

திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்படாத திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை? என, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை – செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர் காங்கிரஸ் அமைப்பின் மாநிலத் தலைவர் மகேஷ்வரன் முன்னிலையில் நடைபெற்ற மாநில மாநாட்டில், அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் அமைப்பின் தேசிய தலைவர் உதித்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப் பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்த மாநாட்டின் போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அளித்து பேட்டியில், ” தொழிலாளர்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை. தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது”.

அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2028-ஆம் ஆண்டு நிறைவடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்தான கேள்விக்கு,

”புள்ளியல் துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும்போது மூன்று ஆண்டுகள் தள்ளிப் போவது ஏமாற்று வேலை என அவர் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணிக்கு யார் வந்தாலும் எந்த கட்சி வந்தாலும் வரவேற்போம் என்று கூறிய செல்வப்பெருந்தகை, கூட்டணியின் தமிழக தலைவரான முதலமைச்சர் ஸ்டாலினே இறுதி முடிவை எடுப்பார்”.

திமுக கூட்டணி கலைந்து போகும் என எதிர்கட்சிகள் கூறுவது குறித்தான கேள்விக்கு,

”ஃபாசிச சக்திகளை மிரட்டும் கொள்கை கூட்டணியான இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட பெயர்த்தெடுக்க முடியாது என்றும் கூட்டணியில் பல கட்சிகள் சேரவே விருப்பம் தெரிவித்திருப்பதாக அவர் கூறியுள்ளாா்”.

திமுக தேர்தல் வாக்குறுதியில் 90 விழுக்காடு நிறைவேற்றி இருப்பதாகவும்  காலை உணவு திட்டம் உள்ளிட்ட கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளதை பற்றி, ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள் என செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பினாா்.

நீட் தேர்வை பொருத்தவரைக்கும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த பின்பும் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது எனற அவர், மக்களுக்கான அரசாக இல்லாத காரணத்தாலேயே, விமான விபத்தில் பலியானோர் தொடர்பாக நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளாா்.

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் 7வது நாளாக காத்திருப்பு போராட்டம்-அண்ணாமலை ஆதரவு

MUST READ