spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ,முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டதால் 8 – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு.

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடைகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ,முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடனே காணப்படுகிறது.ஏற்கனவே குமரிக்கடல் அதை சுற்றியுள்ள அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அதிக பட்சமாக 65-கி.மீ வேகம் வரை காற்று வீசுவதோடு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

we-r-hiring

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடைஇந்த நிலையில் பைபர் படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து குளச்சல் ,முட்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 8 -ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

MUST READ