Homeசெய்திகள்தமிழ்நாடுபெருமையின் அடையாளமான அரசுப் பள்ளிகள் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பெருமையின் அடையாளமான அரசுப் பள்ளிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

-

- Advertisement -

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அரசின் திட்டம் மக்களிடம்  சென்றடைந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே அரசு பள்ளிகளில்  மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில், அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக மாறியுள்ளன என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறிப்பிட்டார்…பெருமையின் அடையாளமாக அரசுப் பள்ளிகள் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 

மழையால் தடைபட்ட அரையாண்டு மற்றும் செய்முறை தேர்வுகள், வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகதில், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம் சார்பில், 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை பதவி உயர்வு வழங்கியதற்காக, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாவட்ட நூலக ஆணையக் குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகள் இருந்தாலும் நூலகத் துறை மட்டும் தான் துறையாக இல்லாமல் ஒரு இயக்கமாக செயல்படுகிறது என்றார். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நூலகர்களுக்கு உரிய மரியாதையை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பள்ளி கல்வித் துறை அமைச்சராகவுள்ள அன்பில் மகேஸ் பல்வேறு கிராமங்களுக்கு சென்று நூலகங்களை ஆய்வு செய்து வருவதாகவும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகே பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாமல் நூலகத்துறையும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில்,கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய நூலகர்கள்,  நூலகர்களாக மட்டும் இல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு படிக்க வரும் மாணவர்களின் நலன் விரும்பிகளாகவும் உள்ளனர் என்றார். திராவிட மாடல் அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் நூலகர்களுக்கு உயர்வு வருகிறது எனவும் தொடக்கத்தில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்ட புத்தக கண்காட்சிகள், தற்போது தமிழகம் முழுவதும் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ்,

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வுகள் மற்றும் Practical Exam எனப்படும் செய்முறை தேர்வுகள், ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும் என தெரிவித்தார்.மாணவர்களின்  பாதுகாப்பே மிக முக்கியம் என்றும் மழையால் பாதிக்கப்பட்ட புத்தகம் மற்றும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எந்தெந்த மாவட்டங்களில்,  எந்தெந்த பள்ளிகளில் தண்ணீர் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது என்ற அறிக்கையை கேட்டுள்ளதாகவும்  அதற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அன்பில், மழை பாதிக்காத மாவட்டங்களில் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் வளத்தையும், வரலாற்றையும் அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு – சு.வெங்கடேசன் எம்பி

MUST READ