spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை அருகே ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை அருகே ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருவதால் சென்னை தாம்பரம் மார்கமாக செல்லும் வானங்களால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால், நேற்று மாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் ஏராளமான வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றனர்.

இதன் காரணமாக சென்னை தாம்பரம் மார்கமாக செல்லும் வானங்களால் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அலுவலக நேரம் என்பதாலும், சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் படையெடுத்து வருவதாலும் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

 

MUST READ