சமீப காலங்களாக தமிழகத்தில் கஞ்சா, மது போதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது. மதுபோதையில் ரயில், பஸ்சில் செல்லும் பயணிகளிடம் தகாராறு செய்வது, என குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது காவல் துறையும் அடாவடி செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் அடங்கியபாடில்லை.ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கவேண்டும்.
சென்னை கேகே நகர் பஜார் சாலையில் நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்கள் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவா்களின் முன்பாக தம்பதியினர் குழந்தையுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அவா்கள் பின்னால் வந்த இளைஞா்கள் மது போதையில் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியுள்ளனா். அதிர்ச்சியடைந்த தம்பதியினர் மதுபோதையில் வந்த இளைஞர்களிடம் சத்தம் போட்டுள்ளனர்.ஆனால் இளைஞர்கள் மதுபோதையில் தம்பதியினரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.பின் இருவரும் போதையில் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த இதனை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் தம்பதி மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர். பொதுமக்கள் கூடுவது தெரிந்த இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயற்சித்தபோது நாலாபுறமும் சுற்றி நின்று அவர்களை மடக்கி பிடித்து பொதுமக்கள் மதுபோதையில் விபத்தையும் ஏற்படுத்திவிட்டு தம்பதியை தாக்கவும் செய்வீா்களா என தப்பி செல்ல முயலும் ஒருவரை பிடித்து ஏன் இப்படி செய்தீா்கள் என்றும்.. இங்கே இருந்து போ.. என்றும் கூறுவது போல் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆவேசத்துடன் இரண்டு இளைஞர்களையும் பொதுமக்கள் தாக்கிய சம்பவத்துக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா் . நெட்டிசன் ஒருவர், “எல்லாவற்றையும் அரசே பார்த்துக்கொள்ளும் என்று இருக்க முடியாது. இது போன்ற சமுதாயத்தில் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்களே நேரடியாக களத்தில் இறங்கி தட்டி கேட்கும் போது தான் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை புயலாக மாறுகிறது..!!