Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

-

- Advertisement -

 

சென்னை திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை வரவேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
File Photo

இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் மத்திய அரசு, சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டு வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக, 212 இந்தியர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் வந்தடைந்தனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் அடங்குவர் என்ற நிலையில், 14 பேர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

அவர்களை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவம் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அயலக தமிழர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

“மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தாக்குதல் தீவிரமான நிலையில், இஸ்ரேலின் அயர்ன் டோம் என்ற நவீன கவசத்தால் உயிர் தப்பி, தற்போது தமிழகம் வந்துள்ளதாக இஸ்ரேலில் இருந்து திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ