- Advertisement -
கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து அதிமுக களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “அதிமுகவின் திரு. வேலுமணி அவர்களுக்கும் ,பாஜகவின் திரு. அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் வார்த்தைப் போர் ஒரு நாடகம். கோவையில் பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து ,அதிமுக களத்தை விட்டுக்கொடுத்தது என்பதே உண்மை. இதையெல்லாம் மீறித்தான் இந்தியா கூட்டணி,திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கோவையில் அதிமுக,பாஜக மறைமுகக் கூட்டணியை மறைக்கவும், அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்றவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.