Homeசெய்திகள்தமிழ்நாடுஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு

ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு

-

- Advertisement -

ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மாநாடு

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கலைஞர் பிறந்த திருவாரூரில் ஜூன் 3-ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை ஓராண்டு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம், அருங்காட்சியகத்தை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க உள்ளனர். தொடக்கவிழா மாநாட்டில் காலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். மாநாட்டில் மாலையில் அகில இந்திய தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் முழுவதும் 100 சிறப்பு  பொதுக்கூட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக ...

திமுகவை மேலும் வலிமைப்படுத்த மேலும் ஒருகோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னெடுப்பு தொடங்கப்படவுள்ளது. துணறிக்கைகள், திண்ணை பிரச்சாரங்கள், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ