Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து - பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

-

கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

PM Modi - பிரதமர் மோடி

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ