Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

-

 

மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் ஓய்கிறது.

மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 17) பரப்புரை நிறைவடைகிறது. இன்று மாலை 06.00 மணிக்கு பின் அமைதி பரப்புரை உட்பட எந்த வகையான பரப்புரைக்கும் அனுமதி இல்லை. தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் இன்று மாலை 06.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பரப்புரையில் அனல் பறக்கிறது. ஏப்ரல் 19- ஆம் தேதி காலை 07.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 06.00 மணி வரை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராயன் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த பிரபல இசையமைப்பாளர்!

மக்களவைத் தேர்தலையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

MUST READ